Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 மக்கள் நல பணியாளர்கள் போராட்டம்

ஜுன் 10, 2022 05:38

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- திருவள்ளூர் மாவட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறோம்.

எங்களுக்கு மதிப்பூதியத்திலிருந்து காலமுறை ஊதியம் மாற்றி அமைக்க வேண்டும்.பணப்பலன், பணிதொடர்ச்சி ஆகியவை திரும்பப் பெறவேண்டும்.60 வயதை கடந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கவேண்டும். இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தனர்.

பின்னர் அவர்கள் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகி பாபு தலைமையில், மாவட்ட தலைவர்கள் தயாளன், மணிவண்ணன், பன்னீர்செல்வம்,சீனிவாசன், பாஸ்கரன் ஆகியோர் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்..

தலைப்புச்செய்திகள்